ரஜத் படிதார் ஆட்டமிழப்பில் சர்ச்சை..! கொந்தளித்த விராட் கோலி, ஆர்சிபி ரசிகர்கள்!
ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் ஆட்டமிழப்பில் நடந்த சர்ச்சை குறித்து...
ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் ஆட்டமிழப்பில் நடந்த சர்ச்சை போட்டியின் போதும் அதற்குப் பிறகு விவாதங்களை எழுப்பியுள்ளது.
நேற்றிரவு குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்து 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய குஜராத் 15.5 ஓவர்களில் 158/6 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது.
இந்தப் போட்டியில் 7.4ஆவது ஓவரில் அர்ஷத் கான் வீசிய பந்தை ரஜத் படிதார் அடிக்க, ஜேசன் ஹோல்டர் பிடிப்பார். இந்தக் கேட்சில் அவர் பந்தை தரையில் வைப்பதாக ஆர்சிபி ரசிகர்களும் விராட் கோலியும் கூறுகிறார்கள்.
Advertisement
Advertisement
நடுவரின் தீர்ப்பின்படி அவர் பந்தை கீழே வைக்கவில்லை என்கிறார்கள். இந்த விக்கெட்டுக்குப் பிறகு ஆர்சிபி அணி படிப்படியாக இழந்தது. விராட் கோலி நடுவரிடம் இது குறித்து விவாதிப்பார்.
சமூக வலைதளத்தில் பலரும் இது குறித்து தங்களது கருத்துகளை முன்வைத்துள்ளார்கள். ஆர்சிபி ரசிகர்கள் மிகுந்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள்.
Controversy over Rajat Patidar's Dismissal of Holder catch! Virat Kohli and RCB Fans Outraged!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.