மிட்செல் மார்ஷ் சதம் விளாசல்; ஆர்சிபிக்கு 210 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் விளையாடியது.
Advertisement
சதம் விளாசிய மிட்செல் மார்ஷ்; ஆர்சிபிக்கு 210 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 145 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின், ஆட்டம் மழையால் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர், போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
19 ஓவர்களில் லக்னௌ அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் சதம் விளாசி அசத்தினார். அவர் 56 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். நிக்கோலஸ் பூரன் 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். கேப்டன் ரிஷப் பந்த் 10 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
க்ருணால் பாண்டியா, ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ராஷிக் சலாம் தர் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது.