குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!
ஐபிஎல் தொடரில் குவாலிஃபையர் 1 போட்டியில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் குவாலிஃபையர் 1 போட்டியில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தரம்சாலாவில் இன்று நடைபெற்று வரும் குவாலிஃபையர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பேட் செய்தது.
Advertisement
Advertisement
ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!
முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரஜத் படிதார் அதிகபட்சமாக 33 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, விராட் கோலி மற்றும் க்ருணால் பாண்டியா தலா 43 ரன்கள் எடுத்தனர். தேவ்தத் படிக்கல் 30 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 19 ரன்கள், ஜித்தேஷ் சர்மா 15 ரன்கள் எடுத்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ககிசோ ரபாடா, ஜேசன் ஹோல்டர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்குகிறது.