சிவப்புப் பந்து போட்டிகளில் சூர்யவன்ஷி விளையாட வேண்டும்: அஸ்வின்
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சிவப்புப் பந்து போட்டிகளில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சிவப்புப் பந்து போட்டிகளில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 15 வயதாகும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, ஜோஷ் ஹேசில்வுட், மார்கோ யான்சென் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் பந்துவீச்சில் மிகவும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில், வெள்ளைப் பந்து போட்டிகளில் அதிரடியாக விளையாடுவது போன்று சிவப்புப் பந்து போட்டிகளிலும் வைபவ் சூர்யவன்ஷி விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: 14 வயதில் விளையாடும்போது வீரர் ஒருவர் தவறுகள் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், வைபவ் சூர்யவன்ஷி எந்த ஒரு தயக்கமும் அழுத்தமுமின்றி சர்வதேச பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடுகிறார். அவர் மிகவும் நுணுக்கமாக விளையாடுகிறார். ஆட்டம் குறித்த புரிதல், அழுத்தமான சூழலில் அதிரடியாக விளையாடுவது அவரை மிகவும் அபாயகரமான வீரராக மாற்றியுள்ளது. அவருக்கு அதிக திறமை இருக்கிறது. அவர் சிவப்புப் பந்து போட்டிகளிலும் நிறைய விளையாட வேண்டும் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி 404 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.