ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டிற்கு 30% அபராதம்..! 2 தகுதியிழப்புப் புள்ளிகள்!
ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டிற்கு விதிக்கப்பட்ட அபாரதம் குறித்து...
ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டிற்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 30 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த மே.10ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 166/7 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய ஆர்சிபி 20 ஓவர்களில் 167/8 ரன்கள் எடுத்தது.
இந்தப் போட்டியில் கடைசி பந்தில் ஆர்சிபி அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டிம் டேவிட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
Advertisement
இந்தப் போட்டியின்போது டிம் டேவிட் ஆர்சிபி அணியினரை நோக்கி அவமானப்படுத்தும் விதமாக இரு விரல்களைக் காண்பிப்பார். இதனால் அவருக்கு 30 சதவிகிதம் அபராதம் உடன் 2 தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
கூடுதலாக 1 தகுதியிழப்புப் புள்ளியைப் பெற்றால் டிம் டேவிட் ஒரு போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன்டி ஃபிளவர் நான்காவது நடுவருடன் விவாதித்தால் அவருக்கும் போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.