முதலிடத்துக்கு முன்னேறுமா ஆர்சிபி? மழையினால் தாமதமாகும் போட்டி!
ஐபிஎல் தொடரின் 57-ஆவது போட்டி குறித்து...
ஐபிஎல் தொடரின் 57-ஆவது போட்டியில் ஆர்சிபியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. ராய்பூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஈரப்பதம் காரணமாக இன்னும் போட்டி தொடங்காமல் இருக்கிறது.
ஆர்சிபி அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பிருக்கிறது.
கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் வென்றால் 11 புள்ளிகளுடன் ஏழாவது இடத்துக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
7 மணிக்கு டாஸ் சுண்டுவதாக இருந்தது. மழையின் காரணமாக இந்தப் போட்டி தாமதமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழையின் காரணமாக இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டால் ஆர்சிபி அணி 15 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலேயே நீடிக்கும்.
இந்தப் போட்டி மழையினால் ரத்துசெய்யப்பட்டால் பிளே ஆப்ஸுக்கு செல்வதில் கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Will RCB climb to the top spot? Toss delayed due to rain
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.