முதலிடத்துக்கு முன்னேறுமா ஆர்சிபி? மழையினால் தாமதமாகும் போட்டி!
ஐபிஎல் தொடரின் 57-ஆவது போட்டி குறித்து...
ஐபிஎல் தொடரின் 57-ஆவது போட்டியில் ஆர்சியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. ராய்பூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அணி தேர்வு செய்துள்ளது.
ஆர்சிபி அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பிருக்கிறது.
கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் வென்றால் 11 புள்ளிகளுடன் ஏழாவது இடத்துக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
7 மணிக்கு டாஸ் சுண்டுவதாக இருந்தது. மழையின் காரணமாக இந்தப் போட்டி தாமதமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழையின் காரணமாக இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டால் ஆர்சிபி அணி 15 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலேயே நீடிக்கும்.
இந்தப் போட்டி மழையினால் ரத்துசெய்யப்பட்டால் பிளே ஆப்ஸுக்கு செல்வதில் கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.