ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை..! மோசமான சாதனை படைத்த அன்ஷுல் கம்போஜ்!
சிஎஸ்கே பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் நிகழ்த்திய மோசமான சாதனை குறித்து...
சிஎஸ்கே பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
நேற்றிரவு (மே.15) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 187/5 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய லக்னௌ அணி 16.4 ஓவர்களில் 188/3 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் சிஎஸ்கேவின் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் 2.4 ஓவர்களில் 63 ரன்கள் கொடுத்தார். அவர் வீசிய இரண்டு ஓவர்களிலும் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை கொடுத்து மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
Advertisement
நடப்பு சீசனில் சிறப்பாக பந்துவீசி வந்த அன்ஷுல் கம்போஜ் ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த மோசமான சாதனை படைத்த முதல் வீரராக இருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் இந்தத் தொல்வியினால் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு 60 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.