ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை..! மோசமான சாதனை படைத்த அன்ஷுல் கம்போஜ்!
சிஎஸ்கே பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் நிகழ்த்திய மோசமான சாதனை குறித்து...
சிஎஸ்கே பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
நேற்றிரவு (மே.15) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 187/5 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய லக்னௌ அணி 16.4 ஓவர்களில் 188/3 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் சிஎஸ்கேவின் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் 2.4 ஓவர்களில் 63 ரன்கள் கொடுத்தார். அவர் வீசிய இரண்டு ஓவர்களிலும் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை கொடுத்து மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
Advertisement
Advertisement
நடப்பு சீசனில் சிறப்பாக பந்துவீசி வந்த அன்ஷுல் கம்போஜ் ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த மோசமான சாதனை படைத்த முதல் வீரராக இருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் இந்தத் தொல்வியினால் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு 60 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
A First in IPL History! Anshul Kamboj Sets an Unwanted Record!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.