முகப்பு
ஐபிஎல்

வெற்றி! சென்னை சூப்பர் கிங்ஸின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி!

30-ஆவது லீக் ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் தோல்வி!

Updated On : 14 ஏப்ரல் 2025, 11:28 pm IST
- PTI
பகிர்:

லக்னௌ: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. குறிப்பாக, உலகெங்கிலுமுள்ள சென்னை அணியின் தீவிர ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

லக்னௌவில் நடைபெற்ற 30-ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீசிய சென்னை அணி வீரர்கள், லக்னௌவை ரன் திரட்ட முடியாமல் நன்றாக கட்டுப்படுத்தினர். சென்னை அணியில் நூர் அகமது 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை எடுத்தது.

அடுத்து களமிறங்கிய சென்னை அணி பவர்- ப்ளே ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் திரட்டி அசத்தியது. இந்தநிலையில், 6 பௌண்டரிகள் விளாசிய ஷேக் ரஷீத் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதன்பின் சென்னையின் ரன் வேகம் கட்டுக்குள் வந்தது.

Advertisement

Advertisement

ஃபார்முக்கு திரும்புவார்கள் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திரிபாதி 9 ரன்களுக்கு(10 பந்துகளில்) நடையைக் கட்டினார்.) அடுத்து வந்த ஜடேஜா (7 ரன்கள்), தமிழக வீரர் விஜய் ஷங்கர்(9 ரன்கள்) ஆட்டமிழக்க தோனி களத்திற்கு வந்தார். அவருடன் துபே ஸ்ட்ரைக்கில் இருந்தார். அப்போது கடைசி 5 ஓவர்களில் சென்னை அணிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்டபோது, ஷர்துல் தாக்கூர் வீசிய 19-ஆவது ஓவரின் முதல் பந்து பௌண்டரி, இரண்டாவது பந்து (நோ-பால்) அதில் ஆஃப் சைடில் சிக்ஸர் பறக்கவிட்டார் ஷிவம் துபே. அதே ஓவரில் ஒரு வைட் பந்தும் வீசப்பட, 19-ஆவது ஓவரில் சென்னை அணி 19 ரன்கள் திரட்டியது; டென்ஷனும் விட்டுப்போனது...

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 5 ரன்கள்தான் தேவை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில் 19.3 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சிஎஸ்கே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments