முகப்பு
செய்திகள்

டி20: 14 ரன்களுக்கு சீன மகளிரணி ஆல் அவுட்

பாங்காக்கில் நடைபெற்ற டி20 ஆட்டம் ஒன்றில் சீன மகளிரணி வெறும் 14 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 15 ஜனவரி 2019, 1:05 am IST
பகிர்:


பாங்காக்கில் நடைபெற்ற டி20 ஆட்டம் ஒன்றில் சீன மகளிரணி வெறும் 14 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி, கிரிக்கெட் விளையாட்டை சீனாவில் பிரபலப்படுத்த வேண்டும் என திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. கடந்த 2010 ஆசிய போட்டியிலும் சீன கிரிக்கெட் அணி முதன்முறையாக களமிறங்கியது.
இந்நிலையில் பாங்காக்கில் கிரிக்கெட் அறிமுக நாடுகளான சீனா, யுஏஇ, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், இந்தோனேஷியா ஆகியவை இடையே டி20 போட்டி நடந்தது. இதில் ஞாயிற்றுக்கிழமை யுஏஇ அணியும்-சீன அணிகளும் மோதின. முதலில் ஆடிய யுஏஇ 203/3 ரன்களை குவித்தது.
பின்னர் ஆடிய சீன அடி வெறும் 14 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹின் லிலி மட்டுமே அதிகபட்சமாக 4 ரன்களை எடுத்தார்.
ஏற்கெனவே சீன ஆடவர்-நேபாள அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தகுதி ஆட்டத்தில் வெறும் 2 ரன்களுக்கு சீனா ஆல் அவுட்டானது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments