முகப்பு
செய்திகள்

ஆஸி. ஓபன்: அரை இறுதியில் ஜோகோவிச்; வெளியேறினார் செரீனா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில், ஜப்பானின் நிஷி கோரி 2ஆவது செட்டில் ஆட்டத்தைதொடர முடியாமல் விலகியதால் முதல்

Updated On : 24 ஜனவரி 2019, 1:10 am IST
பகிர்:


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில், ஜப்பானின் நிஷி கோரி 2ஆவது செட்டில் ஆட்டத்தைதொடர முடியாமல் விலகியதால் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 6-1, 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். முதலாவதுசெட்டை 6-1 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றிய ஜோகோவிச், அபாரமான சர்வீஸ்களை செய்தார். வலது தொடையில் தசை பிடிப்பு பிரச்னை ஏற்பட்டதால் ஆட்டத்தை கைவிடுவதாக நிஷிகோரி அறிவித்தார். இதையடுத்து, ஜோகோ விச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிரான்ஸ் வீரர் பௌலேவை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில்ஜோகோவிச் சந்திக்கிறார்.
செரீனா தோல்வி: 
4 வகை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் பிளிஸ்கோவாவிடம் 4-6, 6-4, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
மற்றொரு காலிறுதியில் வெற்றி பெற்ற ஜப்பானின் ஒஸாகா, வியாழக்கிழமை அரையிறுதியில் பிளிஸ்கோவாவை எதிர்கொள்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.