முகப்பு
செய்திகள்

பிரெஞ்ச் ஓபன்: ஃபெடரர் வெற்றி தொடக்கம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், 6-2, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் லோரென்úஸா சோனேகோவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்க

Updated On : 27 மே 2019, 1:57 am IST
பகிர்:

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், 6-2, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் லோரென்úஸா சோனேகோவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
முன்னாள் சாம்பியனான 37 வயது ஃபெடரர், 24 வயது சோனேகோவை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொண்டார்.
முதல் சுற்று ஆட்டத்தை 6-2 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். 2ஆவது சுற்று விறுவிறுப்பாக அமைந்தது. அந்த சுற்று ஆட்டத்திலும் ஃபெடரரே ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் 6-4 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றினார். மூன்றாவது செட்டையும் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றார் ஃபெடரர்.
புதன்கிழமை நடைபெறவுள்ள அடுத்த சுற்று ஆட்டத்தில், ஜெர்மனி வீரர் ஆஸ்கர் ஒட்டேவை எதிர்கொள்கிறார் ஃபெடரர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், ஜப்பான் வீரர் நிஷிகோரி, பிரான்ஸ் வீரர் குயின்டின் ஹாலிûஸ 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2ஆவது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 4-6, 2-6 என்ற செட் கணக்கில், ரஷிய வீராங்கனை அனஸ்தாஸியா போடபோவாவிடம் தோல்வியுற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஸா, 5-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில், அமெரிக்க வீராங்கனை டெய்லர் டவுன்சென்டை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments