முகப்பு
செய்திகள்

உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பங்கால் அபாரம்

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய நட்சத்திர வீரரும், ஆசிய சாம்பியனுமான அமித் பங்கால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Updated On : 15 செப்டம்பர் 2019, 12:54 am IST
பகிர்:

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய நட்சத்திர வீரரும், ஆசிய சாம்பியனுமான அமித் பங்கால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெறும் இப்போட்டியில் 50-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவும் இப்போட்டிக்கு வலுவான அணியை அனுப்பியுள்ளது. ஆசியப் போட்டி சாம்பியன் அமித் பங்கால் 52 கிலோ பிரிவில் சீன தைபேயின் டு போ வெயை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
23 வயதான அமித் தொடக்கம் முதலே ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி சரமாரியாக குத்துகளை விட்டார். முதல் சுற்றில் அமித்துக்கு பை வழங்கப்பட்டது.
57-63 கிலோ பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கெளஷிக் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் டச்சு வீரர் லாக்ரûஸ வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments