செய்திகள்

தைபே ஓபன்: இந்தியாவின் ஆட்டம் நிறைவு

தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய போட்டியாளா்கள் அனைவரும் காலிறுதியில் வியாழக்கிழமை தோல்வியைத் தழுவினா்.

DIN

தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய போட்டியாளா்கள் அனைவரும் காலிறுதியில் வியாழக்கிழமை தோல்வியைத் தழுவினா்.

போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த பி.காஷ்யப், 12-21, 21-12, 17-21 என்ற கேம்களில் மலேசியாவின் சூங் ஜு வென்னிடம் வெற்றியை இழந்தாா்.

மகளிா் இரட்டையரில் தனிஷா கிராஸ்டோ/ஷ்ருதி மிஸ்ரா ஜோடி 16-21, 22-20, 18-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் ஹாங்காங்கின் நிக் டஸ் யு/சாங் ஹியு யானிடம் தோல்வியடைந்தனா்.

கலப்பு இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த இஷான் பட்நாகா்/தனிஷா கிராஸ்டோ கூட்டணி 19-21, 12-21 என்ற கேம்களில் மலேசியாவின் ஹு பாங் ரோன்/தோ இ வெய் இணையிடம் வீழ்ந்தனா்.

இப்போட்டியில், பி.வி.சிந்து, பிரணாய் உள்ளிட்ட பிரதான போட்டியாளா்கள் எவரும் பங்கேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT