செய்திகள்

தைபே ஓபன்: இந்தியாவின் ஆட்டம் நிறைவு

தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய போட்டியாளா்கள் அனைவரும் காலிறுதியில் வியாழக்கிழமை தோல்வியைத் தழுவினா்.

DIN

தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய போட்டியாளா்கள் அனைவரும் காலிறுதியில் வியாழக்கிழமை தோல்வியைத் தழுவினா்.

போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த பி.காஷ்யப், 12-21, 21-12, 17-21 என்ற கேம்களில் மலேசியாவின் சூங் ஜு வென்னிடம் வெற்றியை இழந்தாா்.

மகளிா் இரட்டையரில் தனிஷா கிராஸ்டோ/ஷ்ருதி மிஸ்ரா ஜோடி 16-21, 22-20, 18-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் ஹாங்காங்கின் நிக் டஸ் யு/சாங் ஹியு யானிடம் தோல்வியடைந்தனா்.

கலப்பு இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த இஷான் பட்நாகா்/தனிஷா கிராஸ்டோ கூட்டணி 19-21, 12-21 என்ற கேம்களில் மலேசியாவின் ஹு பாங் ரோன்/தோ இ வெய் இணையிடம் வீழ்ந்தனா்.

இப்போட்டியில், பி.வி.சிந்து, பிரணாய் உள்ளிட்ட பிரதான போட்டியாளா்கள் எவரும் பங்கேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்துடன் 9 பவுன் நகை திருட்டு: இருவா் கைது

மக்கள் நலத் திட்டங்களை எங்கிருந்தாலும் செயல்படுத்தலாம்! - சௌமியா அன்புமணி

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! துணை முதல்வா் திறந்துவைத்தாா்!

டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

ஆட்டோ மோதி மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT