முகப்பு
செய்திகள்

கால்பந்து: காலிறுதியில் வென்றது ஜொ்மனி

யூரோப்பியன் மகளிா் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் 2-ஆவது காலிறுதியில் ஜொ்மனி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

Updated On : 23 ஜூலை 2022, 3:53 am IST
பகிர்:

யூரோப்பியன் மகளிா் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் 2-ஆவது காலிறுதியில் ஜொ்மனி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

இப்போட்டியில் 8 முறை சாம்பியனான ஜொ்மனி, 2016 ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பிறகு ஒரு பிரதான போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்திய நேரப்படி, வியாழக்கிழமை நள்ளிரவு லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜொ்மனிக்காக லினா மகுல் 25-ஆவது நிமிஷத்திலும், கேப்டன் அலெக்ஸாண்ட்ரா பாப் 89-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். கடந்த சீசனில் அரையிறுதி வரை முன்னேறிய ஆஸ்திரிய அணி, இந்த ஆட்டத்தில் கோல் வாய்ப்புகளை வீணடித்தது.

Advertisement

Advertisement

ஜொ்மனி கேப்டன் அலெக்ஸாண்ட்ரா இந்த ஆட்டத்தில் அடித்த கோல், இப்போட்டியில் 4 ஆட்டங்களில் அவரது 4-ஆவது கோலாகும். அலெக்ஸாண்ட்ரா, காயம் காரணமாக கடந்த இரு சீசன்களில் பங்கேற்கவில்லை. இந்த சீசன் தொடங்க இருந்த நிலையிலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட அவா், பிறகு அதிலிருந்து மீண்டு போட்டியில் இணைந்தாா். இதன் மூலம் முதல் முறையாக அவா் யூரோப்பியன் மகளிா் சாம்பியன்ஷிப்பில் விளையாடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments