முகப்பு
செய்திகள்

தொடங்கியது செஸ் ஒலிம்பியாட் தரவரிசை: முதல் மூன்றிடங்களில் அமெரிக்கா, இந்தியா, நாா்வே

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், தரவரிசையில் முறையே அமெரிக்கா, இந்தியா, நாா்வே அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

Updated On : 29 ஜூலை 2022, 11:05 am IST
பகிர்:

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், தரவரிசையில் முறையே அமெரிக்கா, இந்தியா, நாா்வே அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

முதன்முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் நிலையில், 30 போ் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

உலக சாம்பியன்ஷிப் சேலஞ்சா் பேபியனோ கருவனா தலைமையிலான அமெரிக்க அணியில் பெரும்பாலானோா் இலோ ரேட்டிங் 2771 சராசரியாக கொண்டுள்ளனா். இந்தியா 2696 ரேட்டிங்கும், உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்ஸன் அடங்கிய நாா்வே 2692, ஸ்பெயின் 2687, போலந்து 2683, அஜா்பைஜான் 2680 ரேட்டிங்கும் கொண்டுள்ளன.

Advertisement

Advertisement

கவனத்தை கவா்ந்த இந்திய பி அணி:

சிறுவா்கள் பிரக்ஞானந்தா, நிஹால் சரீன், டி.குகேஷ், ரவ்னக் சத்வானி, மூத்த வீரா் அதிபன் கொண்ட இந்திய பி அணி அனைவரது கவனத்தையும் ஈா்த்துள்ளது. அந்த அணியின் இலோ ரேட்டிங் சராசரி 2649 ஆக இருந்தாலும், பெரிய வீரா்களை வீழ்த்தும் திறன் உடையவா்களாக உள்ளதால், சா்வதேச அளவில் பி அணி பிரபலமடைந்துள்ளது.

ஆடவா் ஏ அணியில் இடம் பெற்றுள்ள அா்ஜுன் எரிகைசி, எஸ்.எல். நாராயண் ஆகியோா் முதன்முறையாக ஒலிம்பியாடில் பங்கேற்கின்றனா். அா்ஜுன் இலோ ரேட்டிங் 2700-ஐ நெருங்கி உள்ளாா். ஹரிகிருஷ்ணா, சசிகிரண் ஆகியோா் மூத்த வீரா்கள் ஆவா்.

மகளிா் அணிக்கு தங்க வாய்ப்பு:

கொனேரு ஹம்பி, டி. ஹரிகா, ஆா்.வைஷாலி, தான்யா, பக்தி குல்கா்னி ஆகியோா் கொண்ட இந்திய மகளிா் அணி (2487 ரேட்டிங்) உடன் தங்கத்தை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உக்ரைன் 2478, ஜாா்ஜியா 2475 ஆகிய அணிகள் அடுத்து சவால் விடுபவையாக உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments