செய்திகள்

பந்தைப் பார்க்காமல் சிக்ஸர் அடிப்பதை இவரிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்: சூர்யகுமார் யாதவ்

DIN

தென்னாப்பிரிக்க வீரர் டிவால்ட் பிரேவிஸிடம் இருந்து பந்தினைப் பார்க்காமல் சிக்ஸர் அடிக்கும் திறன் வாய்ந்த ஷாட்களை கற்றுக் கொள்ள விரும்புவதாக இந்திய அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

டிவால்ட் பிரேவிஸின் ஷாட் அடிக்கும் திறமைகளைக் கண்டு வியப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒருவருக்கொருவர் தங்களைப் பற்றிய கேள்விகளைக் கேட்டுக் கொள்ளும்போது இதனை அவர் தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: நான் சில நேரங்களில் உங்களது ஷாட்களை விளையாட முயற்சி செய்வேன். நீங்கள் எனக்கு ஒன்றைக் கற்றுத் தர வேண்டும். நீங்கள் எப்படி பந்தினைப் பார்க்காமலேயே ஷாட்களை விளையாடுகிறீர்கள்? சிக்ஸரும் அடிக்கிறீர்கள். எனக்கு அதை நீங்கள் கற்றுத் தர வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த டிவால்ட் பிரேவிஸ் கூறியதாவது: உங்களுக்கு அந்த ஷாட்களைக் கற்றுக் கொடுப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான். நானும் உங்களிடம் இருந்து சில ஷாட்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால் நான் பந்தினைப் பார்க்காமல் அடிக்கும் ஷாட்கள் திட்டமிட்டு விளையாடுவது கிடையாது. அது தானாக வந்து விடுகிறது. எப்படி வருகிறது என்று எனக்கும் தெரியவில்லை என்றார்.

இவர்கள் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளனர். தென்னாப்பிரிக்க வீரரான டிவால்ட் பிரேவிஸ் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள டி20 போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணிக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT