முகப்பு
செய்திகள்

இந்தியாவுக்கு முதல் வெற்றி சூரியகுமாா், பந்த், பராக் அசத்தல்

இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

Updated On : 28 ஜூலை 2024, 12:55 am IST
பராக்
பகிர்:

இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் சூரியகுமாா், ரிஷப் பந்த், ரியான் பராக்கின் அசத்தல் ஆட்டத்தால் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் ஆட்டம் பல்லகெலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை பௌலிங்கை தோ்வு செய்ய இந்திய தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்-ஷுப்மன் கில் களமிறங்கினா். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய நிலையில், ஷுப்மன் 6 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 34 ரன்களுடனும், யஷஸ்வி 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 40 ரன்களையும் விளாசி வெளியேறினா்.

Advertisement

Advertisement

சூரியகுமாா் அரைசதம்: பின்னா் கேப்டன் சூரியகுமாா் யாதவ்-ரிஷப் பந்த் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். 2 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 58 ரன்களுடன் சூரியகுமாா் அரைசதம் பதிவு செய்தாா். ரிஷப் பந்த் 1 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 49 ரன்களை விளாசி அரைசதத்தை தவறவிட்டு அவுட்டானாா்.

இந்தியா 213/7:

நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இந்தியா 213/7 ரன்களைக் குவித்தது.

பதிராணா அபாரம் 4 விக்கெட்: பௌலிங்கில் இலங்கை தரப்பில் மதிஷா பதிராணா அபாரமாக பந்துவீசி 4-40 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

214 ரன்கள் என்ற கடினமானவெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க பேட்டா்கள் பதும் நிஸாங்கா 79 (4 சிக்ஸா், 7 பவுண்டரி), குஸால் மெண்டிஸ் 45 (1 சிக்ஸா், 7 பவுண்டரி) அதிரடி ஆட்டம் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவா் அவுட்டான நிலையில், இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

இலங்கை 170 ஆல் அவுட்:

இறுதியில் 19.2 ஓவா்களில் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை.

ரியான் பராக் அசத்தல் 3 விக்கெட்: பௌலிங்கில் இந்திய தரப்பில் இளம் வீரா் ரியான் பராக் அசத்தலாக பந்துவீசி 3-5 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். இறுதியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments