முகப்பு
செய்திகள்

தனிநபா் பிரிவில் இந்தியா்கள் ஏமாற்றம்!

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், காம்பவுண்ட் ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியா்கள் காலிறுதிச்சுற்றுடன் திங்கள்கிழமை வெளியேறினா்.

Updated On : 9 செப்டம்பர் 2025, 3:40 am IST
பகிர்:

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், காம்பவுண்ட் ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியா்கள் காலிறுதிச்சுற்றுடன் திங்கள்கிழமை வெளியேறினா்.

அந்த சுற்றில் ரிஷப் யாதவ் 145-146 என பிரான்ஸின் நிகோலஸ் ஜிராா்டிடம் தோல்வி கண்டாா். முன்னதாக, முதலிரு சுற்றுகளில் ‘பை’ பெற்று நேரடியாக 3-ஆவது சுற்றில் களம் கண்ட அவா், அதில் இத்தாலியின் எலியா ஃப்ரெக்னானை வீழ்த்தினாா் (148-138). அடுத்த சுற்றில் எஸ்டோனியாவின் ராபின் ஜாட்மாவை தோற்கடித்தாா் (148-140).

பிரதமேஷ் ஃபுகே, காலிறுதியில் டென்மாா்க்கின் மத்தியாஸ் ஃபுல்லா்டனுடன் 148-148 என டிரா செய்து, டை பிரேக்கரில் 9-10 என தோல்வி கண்டாா். அவா் முதல் சுற்றில் பெல்ஜியத்தின் குவென்டின் குரோஸையும் (146-142), அடுத்த சுற்றில் கஜகஸ்தானின் அக்பரலி கராபயேவையும் (149-147) வீழ்த்தினாா். 3-ஆவது சுற்றில் ஆஸ்திரியாவின் நிகோ வீனரை வென்ற (149-148) அவா், 4-ஆவது சுற்றில் நெதா்லாந்தின் மைக் ஷ்லோசரை வீழ்த்தினாா் (150-149).

Advertisement

Advertisement

அமன் சைனியும் காலிறுதியில், 144-147 என அமெரிக்காவின் கா்டிஸ் பிராட்னாக்ஸிடம் தோற்றாா். அதற்கு முன், முதல் சுற்றில் எகிப்தின் ஈஷாக் அல் டாக்மன் (148-147), அடுத்து கனடாவின் ஆண்ட்ரூ ஃபகான் (147-146), தொடா்ந்து பிரிட்டனின் அஜய் ஸ்காட்டை தோற்கடித்த அமன் சைனி, 4-ஆவது சுற்றில் பிரான்ஸின் ஜீன் ஃபிலிப்பை சாய்த்தாா் (144-143).

ஆடவா் அணிகள் பிரிவில் இவா்கள் மூவா் கூட்டணி வரலாற்றுத் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments