இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!
இந்தியன் சூப்பர் லீக்கில் நடைபெற்ற இனவெறி தாக்குதல் பற்றி...
இந்தியன் சூப்பர் லீக்கில் நடைபெற்ற இனவெறி தாக்குதலுக்கு இந்திய கால்பந்து சம்மேளனம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கேரள பிளாஸ்டர்ஸ் அணியினைச் சேர்ந்த வீரருக்கு பெங்களூரு எப்ஃசி அணியின் ரசிகர்கள் இனவெறியைத் தூண்டும் வசனங்களை முழக்கமிட்டனர். இது குறித்து சமூக வலைதளத்தில் மிகுந்த கால்பந்து ரசிகர்கள் தங்களது கண்டனத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தியன் சூப்பர் லீக்கில் ஏப்.11ஆம் தேதி கண்டீரவா விளையாட்டுத் திடலில் கேரள பிளாஸ்டர்ஸ் அணியும் பெங்களூரு எப்ஃசி அணியும் மோதின. இந்தப் போட்டியில் கேரள அணி 2-1 என வென்றது.
Advertisement
கேரள பிளாஸ்டர்ஸ் அணிக்கு விளையாடும் செனகல் நாட்டைச் சேர்ந்த டிஃபெண்டர் ஃபாலூ நதியாய் விளையாடும்போது, பெங்களூரு ரசிகர்கள் இனவெறியைத் தூண்டும் வசனங்களை முழக்கமிட்டனர்.
இது குறித்த தனது புகாரை கேரள அணி இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு அனுப்பினர். இது குறித்த தனது கண்டத்தை சம்மேளனமும் வெளியிட்டுள்ளது. பெங்களூரு அணியும் இது எந்த வகையில் ஏற்கத்தக்கதல்ல என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
நட்பு ரீதியான போட்டியில் மொராகோ மற்றும் ஸ்பெயின் நாட்டுக்கான விளையாடின்போது நடந்த இனவெறி ரீதியான தாக்குதலுக்கு இளம் நட்சத்திர வீரர் லாமின் யமால் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.
இனவெறி காரணமான ரியல் மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஜூனியருக்கு பேலந்தோர் விருது புறக்கணிக்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. சாம்பியன்ஸ் லீக்கில் அவர் மீது நிகழ்த்தப்பட்ட இனவெறி தாக்குதலுக்காக பென்ஃபிகா வீரருக்கு தடை விதிக்கப்பட்டதும் சர்வதேச அளவில் பேசுபொருளானது.