இருவருக்கு ரெட் கார்டு: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பயர்ன் மியூனிக்!
சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் தோல்வியுற்ற ரியல் மாட்ரிட் அணி குறித்து...
சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் இரண்டாம் கட்ட போட்டியில் 4-3 என பயர்ன் மியூனிக் அணி ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது. முன்னதாக, முதல் கட்ட ஆட்டத்தில் 2-1 என பயர்ன் மியூனிக் முன்னிலை வகித்தது.
மொத்தமாக பயர்ன் மியூனிக் 6-4 என்ற கோல் கணக்கில் 15 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.
பயர்ன் மியூனிக் அணி தனது சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் 2-3 என மியூனிக் பின் தங்கியிருந்தது. பின்னர், இரண்டாம் பாதியில் 89, 90+4ஆவது நிமிஷத்தில் லூயிஸ் டைஸ், ஒலிஸே சிறப்பான கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்கள்.
Advertisement
போட்டிக்குப் பிறகு 120ஆவது நிமிஷத்தில் நடுவருடன் வாதிட்ட அர்டா குலேருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. முன்னதாக, கமவிங்காவிற்கு 86ஆவது நிமிஷத்தில் இரண்டாவது எல்லோ (மஞ்சள்) கார்டு கொடுக்கப்பட்டு, ரெட் கார்ட்டாகி வெளியேற்றப்பட்டார்.
ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர், “இதெல்லாம் நம்பவே முடியவில்லை. இதற்கெல்லாமா இந்த ரெட் கார்டுகள் தருவார்கள்? எல்லாமே ரெட் கார்டுடன் முடிந்து விட்டது” என்றார்.