முகப்பு
செய்திகள்

9 கோல்களை தடுத்த 40 வயது கோல்கீப்பர்: ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்த பயர்ன் மியூனிக்!

சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியின் முதல்கட்ட ஆட்டம் குறித்து...

Updated On : 8 ஏப்ரல் 2026, 6:14 pm IST
இலக்கை நோக்கி எம்பாப்வே அடித்த பந்தைத் தடுத்த பயர்ன் மியூனிக் கோல்கீப்பர். - ஏபி
பகிர்:

சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியின் முதல்கட்ட ஆட்டத்தில் ஜாம்பவான் ரியல் மாட்ரிட் அணிக்கு ஜெர்மனி ஜெயண்ட்ஸ் என அழைக்கப்படும் பயர்ன் மியூனிக் அதிர்ச்சி அளித்துள்ளது.

ரியல் மாட்ரிட் தனது சொந்த மண்ணில் பயர்ன் மியூனிக் உடன் நள்ளிரவு ஆட்டத்தில் மோதியது. இந்தப் போட்டியில் 1-2 என பயர்ன் மியூனிக் வென்றது.

இந்தப் போட்டியில் 41, 46ஆவது நிமிஷத்தில் பயர்ன் மியூனிக் சார்பாக லூயிஸ் டைஸ், ஹாரி கேன் கோல் அடித்தார்கள். 74ஆவது நிமிஷத்தில் கிளியன் எம்பாப்வே கோல் அடித்தார்.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் 52 சதவிகித பந்தினை தனது கட்டுக்குள் வைத்திருந்த பயர்ன் மியூனிக் இலக்கை நோக்கி 4 முறை மட்டுமே அடித்தது. ஆனால், ரியல் மாட்ரிட் அணி 10 முறை அடித்தது.

பயர்ன் மியூனிக் அணியின் கோல்கீப்பர் மானுவல் பீட்டர் நியூயர் 9 முறை தடுத்து அசத்தினார். 40 வயதான இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்ட போட்டியில் ரியல் மாட்ரிட் கம்பேக் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

summary

40-Year-Old Goalkeeper Saves 9 Shots: Bayern Munich Shocks Real Madrid!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.