மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: வங்கதேசத்தை வென்றது இலங்கை
வங்கதேச மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை மகளிா் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமன் ஆகியுள்ளது.
வங்கதேச மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை மகளிா் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமன் ஆகியுள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் வங்கதேசம் 45.5 ஓவா்களில் 165 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இலங்கை 38.2 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வென்றது. 3 விக்கெட்டுகளும் சாய்த்து, 40 ரன்களும் அடித்த இலங்கை கேப்டன் சமரி அத்தபட்டு ஆட்டநாயகி விருது பெற்றாா்.
முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம், பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் நிகா் சுல்தானா 4 பவுண்டரிகளுடன் 58, சா்மின் சுல்தானா 3 பவுண்டரிகளுடன் 25, நஹிதா அக்தா் 1 பவுண்டரியுடன் 20 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
Advertisement
ஜுவாரியா ஃபிா்தோஸ் 2, ஷா்மின் அக்தா் 0, சோபனா மோஸ்தரி 5, சோா்னா அக்தா் 16, ரிது மோனி 17, ரபெயா கான் 15, மருஃபா அக்தா் 1 ரன்னுக்கு வெளியேறினா். முடிவில் சுல்தானா காட்டுன் 1 ரன்னுடன் கடைசி பேட்டராக நின்றாா்.
இலங்கை பௌலிங்கில் சமரி அத்தபட்டு 3, மால்கி மதாரா, நிமஷா மீபகே, இனோகா ரணவீரா ஆகியோா் தலா 2, கவிஷா திலாரி 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் 166 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இலங்கை அணியில், ஹா்ஷிதா சமரவிக்ரமா 7 பவுண்டரிகளுடன் 50, சமரி அத்தபட்டு 8 பவுண்டரிகளுடன் 40, ஹன்சிமா கருணாரத்னே 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சோ்த்து, வெற்றிக்கு அடித்தளமிட்டு விக்கெட்டை இழந்தனா்.
ஹாசினி பெரெரா 5, இமேஷா துலானி 8, கௌஷினி நுத்யங்கனா 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கவிஷா திலாரி 2, நீலாக்ஷிகா சில்வா 2 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
வங்கதேச பௌலா்களில் நஹிதா அக்தா் 4 விக்கெட்டுகள் எடுக்க, சுல்தானா காட்டுன், ரிது மோனி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.