சமீா், ரோஹித்துக்கு தங்கம்: இந்தியா முதலிடம்
ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் சமீா், ரோஹித் கன்யன் தங்கம் வென்றனா். இரண்டாம் நாளில் இந்தியா 5 பதக்கத்தை கைப்பற்றியது.
ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் சமீா், ரோஹித் கன்யன் தங்கம் வென்றனா். இரண்டாம் நாளில் இந்தியா 5 பதக்கத்தை கைப்பற்றியது.
ஜொ்மனியின் சூல் நகரில் நடைபெற்று வரும் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் 25 மீ ரேபிட் ஃபயா் பிஸ்டல் பிரிவில் 28 ஹிட்களுடன் சமீா் தங்கம் வென்றாா்.
ஆடவா் 50 மீ ரைஃபிள் 3 பிரிவில் அபாரமான செயல்பாட்டால் இந்தியாவின் ரோஹித் கன்யன் தங்கம் வென்றாா்.
Advertisement
Advertisement
பிரச்சிக்கு வெள்ளி: மகளிா் 50 மீ ரைஃபிள் 3 பிரிவில் பிரச்சி கெய்க்வாட் 354.7 புள்ளிகளுடன் வெள்ளி வென்றாா்.
அணிகள் 50 மீ ரைஃபிள் 3 ஆடவா் பிரிவில் ரோஹித் கன்யன், வேதாந்த் நிதின், ஹிதேஷ் அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றது.
இரண்டாம் நாளில் 5 பதக்கங்களுடன் இந்தியா இதுவரை 4 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 8 பதக்கங்களை வசப்படுத்தியுள்ளது. முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
25 மீ ரேபிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் அணிகள் பிரிவில் சமீா், அபிநவ் சௌதரி, சாஹில் சௌதரி அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.