முகப்பு
செய்திகள்

2 கோல்கள், ஆட்ட நாயகன் விருதுகள்: ஒரே மாதிரி அசத்திய மூன்று நட்சத்திர வீரர்கள்!

கால்பந்து உலகக் கோப்பையில் மூன்று நட்சத்திர வீரர்கள் 2 கோல்கள் அடித்து, ஆட்ட நாயகன் விருது வென்றது குறித்து...

Updated On : 23 ஜூன் 2026, 3:33 pm IST
கிளியன் எம்பாபே, லியோ மெஸ்ஸி, எர்லிங் ஹாலண்ட். - படங்கள்: ஏபி
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பையின் மூன்று நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, எம்பாபே, எர்லிங் ஹாலண்ட் தலா 2 கோல்கள் அடித்து அசத்தினார்கள்.

இந்த மூன்று போட்டிகளிலும் அசத்திய மூவருக்குமே ஆட்ட நாயகன் விருது வென்றார்கள். பிரான்ஸ், ஆர்ஜென்டீனா, நார்வே ஆகிய மூன்று அணிகளுமே நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.

பிரான்ஸ் அணி 3-0 என இராக்கை வென்றது. இதில் கிளியன் எம்பாபே 2 கோல்கள் அடித்து அசத்தினார். முதல் போட்டியிலும் எம்பாபே 2 கோல்ககள் அடித்திருந்தார்.

Advertisement

Advertisement

நார்வே அணி செனகலை 3-2 என வீழ்த்தியது. இதில் எர்லிங் ஹாலண்ட் 2 கோல்கள் அடித்து அசத்தினார். முதல் போட்டியிலும் ஹாலண்ட் 2 கோல்ககள் அடித்திருந்தார்.

ஆர்ஜென்டீனா 2-0 என ஆஸ்திரியாவை வென்றது. இதில் 2 கோல்களையும் மெஸ்ஸி அடித்து அசத்தினார். முதல் போட்டியில் மெஸ்ஸி 3 கோல்கள் அடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸி முதலிடம் பிடிக்க, எம்பாபே இரண்டாமிடத்தில் மிரோஸ்லாவ் க்ளோஸ் உடன் சமன்செய்திருக்கிறார்.

summary

Kylian Mbappe, Lionel Messi, Erling Haaland all 3 superstars strike double goal in same day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments