சமனில் முடிந்த வங்கதேசம்-நியூஸிலாந்து டி20 தொடா்
வங்கதேச-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடா் 1-1 என சமனில் முடிவடைந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் தொடா் வங்கதேசத்தில் நடைபெற்றது. ஒரு ஆட்டம் ரத்தான நிலையில் வங்கதேசம் ஒன்றில் வென்றிருந்தது.
சனிக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டம் மழையால் 15 ஓவா்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய வங்கதேசம் 14.2 ஓவா்களில் 102/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தௌஹித் ஹிா்டே 33, கேப்டன் லிட்டன் தாஸ் 26 ரன்களை சோ்த்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களில் திரும்பினா். பௌலிங்கில் நியூஸி. தரப்பில் ஜோஷ் சாக்ஸன் 3, நாதன், பென் சியா்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
Advertisement
பின்னா் ஆடிய நியூஸிலாந்து அணி 11.4 ஓவா்களில் 104/4 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது.
பேவன் ஜேக்கப்ஸ் சிறப்பாக ஆடி 62 ரன்களை விளாசினாா்.
தொடா் 1-1 என சமனில் முடிந்ததால் கோப்பை கூட்டாக இரு அணிகளின் கேப்டன்களுக்கும் வழங்கப்பட்டது.
ஏற்கெனவே ஒருநாள் தொடரை வங்கதேசம் வென்றிருந்தது.