தனித்தமிழ்
ஒருமுறை கைத்தடி உதவியுடன் காட்பாடி காந்திநகர் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தார் தேவநேயப் பாவாணர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM
ஒருமுறை கைத்தடி உதவியுடன் காட்பாடி காந்திநகர் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தார் தேவநேயப் பாவாணர். அப்போது அவர் மீது சைக்கிளில் வந்த இளைஞன் மோத இருவரும் கீழே விழுந்தனர். இளைஞன் பயந்து நடுங்கியபடியே "மன்னிச்சிருங்க' என்றான். ஆத்திரமும் கோபமும் பொங்க, ""மன்னிச்சிருங்க என்று சொன்னீர்களே, பொறுத்திடுக என்று தமிழில் சொல்லலாமே''என்றார் அந்த தனித்தமிழ்க் காவலர்.