மாமல்லபுரத்தில் ரூ. 250 கோடியில் கடல்வாழ் உயிரினக் காட்சியகம்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ரூ. 250 கோடி செலவில் உலகத் தரத்திலான கடல்வாழ் உயிரினக்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ரூ. 250 கோடி செலவில் உலகத் தரத்திலான கடல்வாழ் உயிரினக் காட்சியகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்த பட்ஜெட் அறிவிப்பு:
ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் கிழக்கு சுற்றுலா சுற்றமைப்பு மற்றும் தென்னகச் சுற்றுலா சுற்றமைப்பு ஆகியவற்றில் உள்ள குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்களின் கட்டமைப்பை மேம்படுத்தும் சிறப்புத் திட்டம் ரூ. 450 கோடி செலவில் 2012-13-ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதுபோல் 2013-14-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட சுற்றுலா மையங்களில் இத்திட்டத்தின் மூலம் ரூ. 67.91 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
"தமிழ்நாட்டுக்குச் செல்வோம் 2014' என்ற உத்தியின் அடிப்படையில் சுற்றுலா மேம்பாட்டுக்கான விளம்பரப் பணிகளை மேற்கொள்ள ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2013-14-ம் நிதியாண்டில் சுற்றுலாத் துறைக்கு ரூ. 153.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடல்வாழ் உயிரினக் காட்சியகம்: மீன்வளத் துறையின் தொழில்நுட்ப உதவியோடு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் மாமல்லபுரத்தில் ரூ. 250 கோடி செலவில் உலகத் தரத்திலான கடல்வாழ் உயிரினக் காட்சியகம் அமைக்கப்படும்.
இதுபோல் அரியலூரில் தொல்படிவப் பொருள் அருங்காட்சியகம் ரூ. 2 கோடி செலவில் அமைக்கப்படும்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ரூ. 2 கோடி: தமிழ் வளர்ச்சித் துறைக்கென 2013-14 நிதியாண்டில் ரூ. 39.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சிறப்பு மானியமாக ரூ. 2 கோடி வழங்கப்படும்.