ஏரியில் மினி பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம்
நாட்டறம்பள்ளி அருகே திங்கள்கிழமை, ஏரியில் மினிபஸ் கவிழ்ந்து கைக்குழந்தை உள்பட 30 பேர் காயமடைந்தனர்.
நாட்டறம்பள்ளி அருகே திங்கள்கிழமை, ஏரியில் மினிபஸ் கவிழ்ந்து கைக்குழந்தை உள்பட 30 பேர் காயமடைந்தனர்.
நாட்டறம்பள்ளியில் இருந்து குறுபவானிகுண்டா பகுதிக்கு தனியாருக்கு சொந்தமான மினிபஸ் திங்கள்கிழமை சென்றது. பஸ்ûஸ சேகர் (30) ஓட்டிச் சென்றார். நாட்டறம்பள்ளியில் திங்கள்கிழமை சந்தை கூடியதால் மினிபஸ்ஸில் அதிக அளவாக 52 பயணிகள் ஏறியிருந்தனர்.
தொப்பலகுண்டா ஊராட்சி ஏரிக்கரை அருகே சென்ற போது மினிபஸ் கட்டுப்பாட்டை இழந்து 7 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை காப்பாற்றினர்.
Advertisement
இவ்விபத்தில் நாட்டறம்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 30 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் விஜயலட்சுமி என்பவரின் 15 நாள் பெண் குழந்தை சிறிய சிராய்ப்புகளுடன் உயிர் தப்பியது.