முகப்பு
தமிழ்நாடு

துபையில் சிக்கியுள்ள ஈழத் தமிழர்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: தொல். திருமாவளவன்

ஆஸ்திரேலியா செல்லும்போது படகு பழுதானதால் துபையில் சிக்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்பக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 12 ஏப்ரல், 2013 at 1:53 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:08 PM

ஆஸ்திரேலியா செல்லும்போது படகு பழுதானதால் துபையில் சிக்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்பக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியா செல்லும்போது நடுக்கடலில் படகு பழுதானதால் தத்தளித்துக் கொண்டிருந்த 46 ஈழத் தமிழர்களில் 7 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 20 பேருக்கு அமெரிக்காவும், ஸ்வீடனும் புகலிடம் வழங்கியுள்ளன. மீதமுள்ள 19 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப துபை அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement

இந்த 19 பேரில் ஈழத்தில் இருந்த தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோகினி ரதிமோகனும் ஒருவர். ஏற்கெனவே, அவ்வாறு செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா இலங்கைப் படையால் கொடூரமாகக் கொல்லப்பட்ட நிலையில், லோகினியை இலங்கைக்கு அனுப்புவது சரியானது அல்ல.

எனவே, இந்தப் பிரச்னையில் இந்திய அரசு தலையிட்டு ஈழத் தமிழ் அகதிகள் அனைவரையும் இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.