முகப்பு
தமிழ்நாடு

உள்துறையின் புதிய செயலர் நிரஞ்சன் மார்டி

உள்துறையின் புதிய செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த அவர்

Updated On : 22 மே 2013, 3:08 am IST
பகிர்:

உள்துறையின் புதிய செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த அவர் முதல்வர் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் உள்ள மிக முக்கிய துறையான உள்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உள்துறையின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால், மின் நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்) ராஜீவ் ரஞ்சன் - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலாளர் (வருவாய்த் துறை செயலாளர்)

Advertisement

Advertisement

ககன்தீப் சிங் பேடி - வருவாய்த் துறை செயலாளர் (கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர்)

எஸ். விஜயகுமார் - கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் (ஊரக வளர்ச்சித் துறை ஆணையாளர்)

கிரிஜா வைத்தியநாதன் - நில நிர்வாக ஆணையாளர் (தமிழ்நாடு மின் நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்).

உள்துறையின் 4-வது புதிய செயலாளர்: அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், உள்துறையின் செயலாளராக ஷீலா ராணி சுங்கத் நியமிக்கப்பட்டார். அவர் 2011 ஜூன் மாதம் மாற்றப்பட்டு, புதிய செயலாளராக ரமேஷ்ராம் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டார்.

ரமேஷ் ராம் மிஸ்ரா, கடந்த ஆண்டு ஜனவரி 27-ல் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக உள்துறையின் புதிய செயலாளராக ஆர்.ராஜகோபால் நியமிக்கப்பட்டார். இப்போது, ராஜகோபால் மாற்றப்பட்டு நிரஞ்சன் மார்டி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.