முகப்பு
தமிழ்நாடு

"நெய்வேலி பழுப்பு நிலக்கரியை வெளிமாநிலங்களுக்கும் விற்கத் திட்டம்'

நெய்வேலி பழுப்பு நிலக்கரியை அண்டை மாநிலங்களுக்கும் விற்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, நெய்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மண்டல நிலக்கரி நுகர்வோர் குழுமக் கூட்டத்தில், என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திரமோகன் தெரிவித்தார்.

Updated On : 12 ஜூன், 2013 at 2:37 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

நெய்வேலி பழுப்பு நிலக்கரியை அண்டை மாநிலங்களுக்கும் விற்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, நெய்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மண்டல நிலக்கரி நுகர்வோர் குழுமக் கூட்டத்தில், என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திரமோகன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அவர் பேசியது: இந்நிறுவனத்தில் வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி, நிறுவனத்தின் அனல்மின் நிலையங்களுக்கு பயன்படுத்தியது போக, அருகிலுள்ள மின் நிலையம் மற்றும் சிமெண்ட் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு விற்பனை செய்யப்படும் பழுப்பு நிலக்கரியின் அளவை நடப்பு நிதியாண்டில் இருமடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால், அண்டை மாநிலங்களில் உள்ள தொழிலகங்களுக்கும் பழுப்பு நிலக்கரியை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் நாட்டின் அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்த என்எல்சி வழிவகுத்துள்ளது என்றார் சுரேந்திரமோகன். இக்கூட்டத்தில், மண்டல நிலக்கரி நுகர்வோர் குழும உறுப்பினர்கள் சி.டி.மெய்யப்பன், ஜெயப்பிரகாஷ், மப்பண்ண கஞ்சக்ரி, நிறுவன இயக்குநர்கள் ஆர்.கந்தசாமி, சரத்குமார் ஆச்சார்யா, ராகேஷ்குமார், எஸ்.ராஜகோபால் மற்றும் ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.