முகப்பு
தமிழ்நாடு

நாளை இரவுமுதல் வேலைநிறுத்தம்: ஏ.ஐ.டி.யூ.சி. அறிவிப்பு

நெய்வேலி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிடக் கோரி

Updated On : 2 ஜூலை 2013, 2:41 am IST
பகிர்:

நெய்வேலி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிடக் கோரி புதன்கிழமை இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலர் எம்.சேகர் தெரிவித்தார்.

பண்ருட்டியில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நெய்வேலி நிறுவன பங்கு விற்பனையை கைவிடக் கோரி புதன்கிழமை இரவு முதல் போராட்டம் தொடங்க உள்ளது.

ஏ.ஐ.டி.யூ.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்பர்.

Advertisement

Advertisement

நெய்வேலி புதுக்குப்பம் ரவுண்டானாவில் இருந்து பேரணி புறப்பட்டு 8 ரோடில் முடிவடைந்ததும் போராட்டம் அறிவிக்கப்படும்.

மாநிலத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுப்புராயன், பொதுச்செயலர் டி.எம்.மூர்த்தி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகர்களில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கடலூரில் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மாரியப்பன் தலைமை வகிப்பார்.

இதில் வங்கி, தொலைத்தொடர்பு துறை, ஆசிரியர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்பர் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.