முகப்பு
தமிழ்நாடு

கம்யூனிஸ்ட் கட்சிகள் இரட்டை வேடம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத் எம்.பி. தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒரு சீட்டுக்காக இரட்டை வேடம் போட்டதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

Updated On : 22 ஜூலை, 2013 at 3:10 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM

நாடாளுமன்றத் எம்.பி. தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒரு சீட்டுக்காக இரட்டை வேடம் போட்டதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

பா.ம.க. ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

Advertisement

கடந்த 2 மாதங்களில் மட்டும் 8 ஆயிரம் பா.ம.க.வினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிமுக அரசின் பழிவாங்கும் படலத்தால் முக்கிய நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் சிறைச் சென்றனர்.

மூத்த தலைவர் ராமதாஸýம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுபோல் பல்வேறு போராட்டங்களைக் கடந்துதான், பா.ம.க. வளர்ச்சி அடைந்துள்ளது.

திமுக, அதிமுகவை தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர், ஒரு நாடாளுமன்ற எம்.பி. சீட்டுக்காக இரட்டை வேடம் போட்டனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டால், குறைந்தபட்சம் 15 தொகுதிகளை கைப்பற்றும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.