4 கூட்டுறவு சங்கங்களுக்கு மத்திய அரசு பரிசு
தமிழகத்தில் உள்ள நான்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள நான்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.
சென்னையில் கூட்டுறவு சங்கத் தலைவர்களுக்கான பயிற்சியை வியாழக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது:
பதினாறாவது இந்திய கூட்டுறவு காங்கிரஸ் கூட்டம் அண்மையில் புது தில்லியில் நடைபெற்றது. இந்திய அளவில் 7 ஆயிரத்து 202 வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் உள்ளன. அதில், தமிழகத்துக்கு மட்டும்தான் ஒரு கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் மூன்று கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் சிறந்த சங்கங்களாக தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், பொள்ளாச்சி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம், பட்டுக்கோட்டை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம், உடுமலைப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் ஆகிய சங்கங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.