3,000 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சக்கர நாற்காலிகள், செயற்கை கால்கள்
ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை சார்பில் 3 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சக்கர நாற்காலி மற்றும் செயற்கை கால்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை சார்பில் 3 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சக்கர நாற்காலி மற்றும் செயற்கை கால்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சக்கர நாற்காலி மற்றும் செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பங்கேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் மற்றும் சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
இது குறித்து ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளையின் செயலாளர் மனோஜ் கூறியது: ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், காது கேட்கும் கருவிகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கும் முகாமை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினோம். இது, ஆகஸ்ட் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 3000 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பில் இலவச உபகரணங்கள் வழங்க உள்ளோம். இதில், 400 மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், காது கேட்கும் கருவிகள் வழங்ககிறோம். 450 பேருக்கு பல் பிரச்னைகள் உடனடியாக சரி செய்கிறோம். இது, தென் இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளைத் தேர்வு செய்து வழங்குகிறோம். தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகமான செயற்கை கால்கள் மற்றும் நாற்காலிகள் வழங்க உள்ளோம் என்றார் அவர்.
Advertisement
Advertisement