முகப்பு
தமிழ்நாடு

"திருநள்ளாறு கோவிலுக்கு ரூ. 50 லட்சத்தில் ஸ்கேனர் கருவி'

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வருவோரின் பைகளை சோதனை செய்ய ரூ.50 லட்சத்தில் ஸ்கேனர் கருவி வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 12 செப்டம்பர், 2013 at 12:51 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வருவோரின் பைகளை சோதனை செய்ய ரூ.50 லட்சத்தில் ஸ்கேனர் கருவி வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோவில் நிர்வாக அலுவலர் ஏ. ராஜராஜன்வீராசாமி புதன்கிழமை கூறியது:

காவல் துறையின் ஆலோசனைப்படி, கோவிலுக்கு வரும் பக்தர்களின் பைகளை சோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதையடுத்து, பக்தர்களின் பைகளை ஸ்கேன் செய்து கோவிலுக்குள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு அரசின் அனுமதி பெறப்பட்டது.

இதற்காக, ரூ.50 லட்சத்தில் 3 நவீன ஸ்கேனர் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது. அரசின் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன் ஒரு மாதத்தில் ஸ்கேனர் வரவழைக்கப்படும். இதற்காக கோவில் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து, காவல் துறையின் ஒத்துழைப்புடன் சோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.