தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியை எண்மப்படுத்த நிதி ஒதுக்கீடு
தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியை எண்மப்படுத்த (டிஜிட்டல்மயமாக்க) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் விவரம்:
தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியை எண்மப்படுத்த (டிஜிட்டல்மயமாக்க) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் விவரம்:
தமிழ்மொழி உலகத்தின் மூத்தமொழி என்ற சொல்லுக்குக் காரணமாக இருப்பது தமிழின் வேர்ச்சொற்களாகும். அந்தச் சொற்களை ஆய்வு செய்வதற்காக அகரமுதலித் திட்ட இயக்ககம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயக்ககம், செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் 13 ஆயிரத்து 327 பக்கங்கள் அடங்கிய 31 தொகுதிகளைக் கொண்ட நூல்களை வெளியிட்டுள்ளது.
இந்த 31 தொகுதிகளும் எண்மப்படுத்தப் பட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், இதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.