கையில் மருதாணி வைத்த சிறுவனுக்கு ரூ.500 அபராதம் விதித்த பள்ளி: பெற்றோர் குமுறல்
சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், கையில் மருதாணி வைத்துச் சென்ற சிறுவனுக்கு ரூ.500 அபராதம்
சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், கையில் மருதாணி வைத்துச் சென்ற சிறுவனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பெற்றோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆடை, அணிகலன்கள் மட்டும் அல்லாமல், இதுபோன்ற சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகளை மீறும் மாணவ, மாணவிகள் தண்டிக்கப்படுவதும், சில பள்ளிகளில் அபராதம் விதிக்கப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கையில் மருதாணி வைத்ததற்காக ரூ.500 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து பெற்றோர் கலக்கத்தில் உள்ளனர்.