முகப்பு
தமிழ்நாடு

கவனிக்க வேண்டிய புது வரவுகளில் சில...

சென்னையில் நடந்து முடிந்த 40-ஆவது புத்தகக் கண்காட்சியில் வழக்கம் போல பொதுமக்களிடம் பிரபலமான பொன்னியின் செல்வன், வால்காவில் இருந்து கங்கை வரை, சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட புத்தகங்கள் அதிகம்

Updated On : 20 ஜனவரி, 2017 at 2:23 AM
பகிர்:

சென்னையில் நடந்து முடிந்த 40-ஆவது புத்தகக் கண்காட்சியில் வழக்கம் போல பொதுமக்களிடம் பிரபலமான பொன்னியின் செல்வன், வால்காவில் இருந்து கங்கை வரை, சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின. மேலும், பல புதுவரவு புத்தகங்களுக்கும் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
கண்காட்சியின் கடைசி நாள்களிலும் பல புதுவரவு நூல்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில், நல்ல வரவேற்பைப் பெற்ற நூல்களில் சில:

பனைமரமே பனைமரமே, ஆ. சிவசுப்பிரமணியன்
காலச்சுவடு பதிப்பகம்
நில்...கவனி...செல்..., ஆர்.வி.பதி
எஸன்ஷியல் பப்ளிக்கேஷன்ஸ்
கல் மேல் நடந்த காலம்: வரலாற்றை சார்ந்த கட்டுரைகள்
சு. தியடோர் பாஸ்கரன், என்.சி.பி.எச்.
சாதியப் பிரச்னையும் மார்க்சியமும்
தொகுப்பு: கொற்றவை, குறளி பதிப்பகம்
பாலுமகேந்திராவின் சந்தியாராகம்: திரைக்கதை
பாலுமகேந்திரா, வம்சி புக்ஸ்
புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புக் கதைகள்
புதுமைப்பித்தன், புதுப்புனல் பதிப்பகம்
மகாவீரர் எல்லைக் காந்தி கான் அப்துல் கபார்கான்:
வாழ்வும் தத்துவமும்
ஆங்கிலத்தில்: ராஜ்மோகன் காந்தி
தமிழில்: டாக்டர் ச.பாண்டியன் சர்வோதய
இலக்கியப் பண்ணை
பயண சரித்திரம்: ஆதி முதல் கி.பி. 1435 வரை முகில்,
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
துரோகி டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ்
தமிழில்: எம்.எஸ். அப்துல் ஹமீது
இலக்கியச் சோலை
திரைக்களஞ்சியம்: தொகுதி 2 (1961 முதல் 1970 வரை
கோ. நீலமேகம், மணிவாசகர் பதிப்பகம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.