முகப்பு
தமிழ்நாடு

குடியரசுதினம்: முதல் முறையாக கொடியேற்றுகிறார் முதல்வர்

குடியரசு தினத்தின்போது, ஆளுநர் கொடியேற்றுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு குடியரசு தினத்தின் போது, முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றவுள்ளார்.

Updated On : 22 ஜனவரி 2017, 1:22 am IST
பகிர்:

குடியரசு தினத்தின்போது, ஆளுநர் கொடியேற்றுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு குடியரசு தினத்தின் போது, முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றவுள்ளார்.
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும், மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராகவும் உள்ள வித்யாசாகர் ராவ், அந்த மாநிலத்தில் கொடியேற்றவுள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அரசு சார்பில் மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே 26-ஆம் தேதி காலை 8 மணிக்கு குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான சிறப்பு மேடைகள் மற்றும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் அமர்வதற்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்படுகிறது.
இந்த விழாவுக்கான அழைப்பிதழை தமிழக அரசு முன்கூட்டியே வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அழைப்பிதழை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள மகாத்மா காந்தி சில அருகே குடியரசு நாள் அணி வகுப்பு நடைபெறவுள்ளது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிவகுப்பு மரியாதையை ஏற்பார் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை நிகழ்ச்சிகள் நடைபெறுமா?: குடியரசு தின விழா ஒத்திகையின் போது காவலர்கள், முப்படையினரின் அணிவகுப்பு மட்டுமே நடைபெற்று வருகிறது. இதனால், வழக்கமாக நடைபெறும் கல்லூரி-பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆளுநர் இல்லாத சூழல், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவு ஆகியவை காரணமாக குடியரசு தின விழா மிகவும் எளிமையான முறையில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments