முகப்பு
தமிழ்நாடு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: விசாரணைக்காக டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் ஆஜர் 

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் விசாரணைக்காக டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

Updated On : 5 ஏப்ரல் 2018, 12:55 pm IST
பகிர்:

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் விசாரணைக்காக டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்ளே வங்கி மூலம் 1 கோடியே 4 லட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ததாக அமலாக்கத்துறையினர் டிடிவி தினகரன் மீது அந்நிய செலவாணி மோசடி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இவ்வழக்கில் டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது வழக்கின் குறுக்கு விசாரணைக்கு அவகாசம் கேட்ட தினகரனின் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.  இதையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பப்பட்டது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments