"பர்தா' அணிந்து வரும் திருடர்கள்: போலீஸ் எச்சரிக்கை
மதுரையில் திருநகர் பகுதியில் பர்தா அணிந்த ஆண் நபர்கள் திருடும் நோக்கத்துடன் சுற்றித் திரிவதாக போலீஸார் தெரிவித்தனர்.
மதுரையில் திருநகர் பகுதியில் பர்தா அணிந்த ஆண் நபர்கள் திருடும் நோக்கத்துடன் சுற்றித் திரிவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து திருநகர் போலீஸார் தெரிவித்தது: திருநகர் மற்றும் விஸ்தரிப்பு பகுதிகளான அமைதிச்சோலை நகர், அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பர்தா அணிந்த ஆண் ஒருவரும் மற்றொருவரும் இரு சக்கர வாகனத்தில் வீடு வீடாகச் சென்று நன்கொடை கேட்டுள்ளனர்.
மேலும் ஆள் இல்லாத வீடுகளையும் அவர்கள் நோட்டமிட்டுள்ளனர். இதைக் கவனித்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இருவரையும் விசாரிக்க முற்படும்போது இருவரும் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
Advertisement
Advertisement
எனவே வீட்டில் தனியாக இருப்பவர்கள் இது போன்ற நபர்கள் வரும்போது விசாரித்துவிட்டு கதவை திறக்கவேண்டும். சந்தேகப்படும் படியான நபர்கள் வரும் பட்சத்தில் உடனடியாக திருநகர் காவல் நிலையத்திற்கு 0452 2487783 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.