முன்னெச்சரிக்கையாக மெரீனா கடற்கரையில் அதிவிரைவு அதிரடிப்படையினர் குவிப்பு
தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றன.
சென்னை: தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று நடந்துவரும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், பல இடங்களில் ரயில் மறியல் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
Advertisement
Advertisement
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் இன்று காலை மெரீனாவில் ஊர்வலம் செல்ல முயன்றார். அவரை காவல்துறையினர் குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். அவருடன் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சூழ்நிலையைப் பயன்படுத்தி மாணவர் - இளைஞர் அமைப்பினர் கூடி விடக் கூடாது என்பதற்காக மெரீனா கடற்கரை நோக்கி செல்லும் பாதைகளை காவல்துறையினர் அடைத்து விட்டனர்.
மேலும், சென்னை மெரீனா கடற்கரை பகுதி முழுவதும் அதிவிரைவு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.