ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார் ராஜபட்ச: வைகோ
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார்.
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, நீண்டகாலம் சிறையில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று ராஜபட்ச அறிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களை முழுமையாக அழித்தொழிக்கும் செயலில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் ராஜபட்ச, அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அழுத்தத்தை உலக நாடுகளிடையே குறைக்கவும் இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறார். அவர் எந்தக் காலத்திலும் தமிழ் இனத்தால் மன்னிக்கப்பட முடியாக, ஒரு இனப் படுகொலைக்காரர் என்றார் வைகோ.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.