சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் தீ விபத்து
சென்னை எழிலகத்தில் இன்று காலை சிறிய தீ விபத்து நேரிட்டது.
சென்னை: சென்னை எழிலகத்தில் இன்று காலை சிறிய தீ விபத்து நேரிட்டது.
எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்படடது. நீர்வளத்துறை அலுவலகத்தில் உள்ள குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.