முகப்பு
தமிழ்நாடு

மொசாம்பிக் கடலோரக் காவலர்களுக்கு சென்னையில் பயிற்சி

இந்திய கடலோரக் காவல்படை சார்பில் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த 14 கடலோரக் காவல்படை வீரர்களுக்கு சென்னையில் இரண்டு வாரகால பயற்சி அளிக்கப்படுகிறது.

Updated On : 6 நவம்பர் 2018, 2:23 am IST
பகிர்:


இந்திய கடலோரக் காவல்படை சார்பில் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த 14 கடலோரக் காவல்படை வீரர்களுக்கு சென்னையில் இரண்டு வாரகால பயற்சி அளிக்கப்படுகிறது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல் படை மூலம், மொசாம்பிக் நாட்டு வீரர்களுக்கு வரும் 16 -ஆம் தேதி வரை கடலோரப் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் ரோந்து, மீனவர்கள் பாதுகாப்பு, கடற்கொள்ளை, கப்பல்களைக் கடத்துவதைத் தடுப்பது போன்ற பல்வேறு பிரிவுகளில் இந்திய கடலோரக் காவல்படை வீரர்கள் மொசாம்பிக் கடலோரக் காவல்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.
இதற்காக மொசாம்பிக்கில் இருந்து கடலோர காவல்படை அதிகாரிகள் 7 பேரும், காவலர்கள் 7 பேரும் சென்னை வந்துள்ளனர். அவர்களுக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை முறைப்படி தொடங்குகிறது. இப்பயிற்சியை இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய கமான்டண்ட் ஐ.ஜி. பரமேஷ்வர் தொடங்கி வைக்கிறார்.
இதேபோன்று, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வியட்நாம் கடலோரக் காவல்படை வீரர்களுக்கு இந்தியா சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments