ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி வழக்கு
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து இதற்கான பணிகள் அண்மையில் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியானவருக்கு அரசு செலவில் நினைவிடம் கூடாது என்றும் எனவே, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.