அறக்கட்டளை-சங்கங்கள் மூலம் தனியார் பல்கலை.: பேரவையில் மசோதா தாக்கல்
அறக்கட்டளைகள், சங்கங்கள் ஆகியவற்றின் மூலமாக தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கான புதிய சட்ட மசோதாவை பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
அறக்கட்டளைகள், சங்கங்கள் ஆகியவற்றின் மூலமாக தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கான புதிய சட்ட மசோதாவை பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புதன்கிழமை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது.
மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்கும் பொருட்டு, தமிழகத்தில் இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்காக அண்மையில் சட்டங்கள் இயற்றப்பட்டன. மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதில் அரசுக்குத் துணை நிற்கும் பொருட்டும், உலகத் தரம் வாய்ந்த கல்வியை அளிக்கும் பொருட்டும் மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ முன்வருபவர்களுக்கு வசதி ஏற்படுத்தித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ முன்வரும் அமைப்புகளுக்கு அதாவது பொறுப்பு அறக்கட்டளைகள், சங்கங்கள், லாப நோக்கம் இல்லாமல் இயங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதற்கேற்ற வகையில், புதிய சட்டம் இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.