முகப்பு
தமிழ்நாடு

தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை... வாகன ஓட்டிகள் அச்சம்!

இந்த மாதத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை இன்று திங்கள்கிழமை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை

Updated On : 15 ஜனவரி 2019, 7:37 am IST
பகிர்:


இந்த மாதத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை இன்று திங்கள்கிழமை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 40 காசுகளும், டீசல் விலை 53 காசுகளும் உயர்ந்துள்ளன. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.33 என்ற உச்ச விலையில் இருந்தது. அதே மாதம் 17-ஆம் தேதி டீசல் விலை உச்சத்தை எட்டி, ஒரு லிட்டர் ரூ.80.04-க்கு விற்பனையானது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டன. இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான வரியை ரூ.2.50 வரை குறைத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து குறைந்தது. கடந்த இரண்டரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.14.54-ம், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ. 13.53-ம் குறைந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த வாரம் வரை இறங்கு முகத்தில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை, சில தினங்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.72.39 ஆகவும், டீசலின் விலை ரூ.67.25 ஆகவும் இருந்து வந்த நிலையில், இன்று திங்கள்கிழமை 5வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.72.79 ஆகவும், டீசல் விலை 53 காசுகள் அதிகரித்து ரூ.67.78 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து 5வது நாளாக மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வருவதை நினைத்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments