முகப்பு
தமிழ்நாடு

சமூக வலைதளத்தில் அவதூறு: விசிக நிர்வாகி மீது வழக்கு

சமூக வலைதளத்தில் அதிமு க மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On : 27 மே 2019, 2:56 am IST
பகிர்:

சமூக வலைதளத்தில் அதிமு க மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பொருளாளர் தீரவளவன்.
இவர், இரு சமூகத்தினரிடையே மோதல் உருவாக்கும் வகையிலும் மற்றும் அதிமுக மற்றும் பாமக குறித்து சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்துவந்துள்ளார். 
இதுகுறித்து சிறுகடம்பூர் கிராம நிர்வாக அலுவலர் கலைவாணன் அளித்த புகாரின் பேரில், இரும்புலிக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள தீரவளவனைத் தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments